Tuesday 7th of May 2024 01:16:41 PM GMT

LANGUAGE - TAMIL
குவால்காம் நிறுவனத்திற்கு ரூ.1869 கோடி அபராதம் விதிப்பு

குவால்காம் நிறுவனத்திற்கு ரூ.1869 கோடி அபராதம் விதிப்பு


ஐரோப்பாவின் போட்டி ஒழுங்குமுறை ஆணையம் 2-வது முறையாக சிப்கள் உருவாக்கும் தொழிலில் முன்னணியில் உள்ள குவால்காம் நிறுவனத்துக்கு ஆயிரத்து 869 கோடியே 67 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

சிப்கள் உருவாக்கி வரும் குவால்கம் நிறுவனம் சர்ச்சையில் சிக்கிக் கொள்வதே வாடிக்கையாக உள்ளது. முன்பு ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களில் தங்களது சிப்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனக் கூறி அந்நிறுவனத்துக்கு குவால்காம் நிறுவனம் பணம் அளித்ததாகவும், இதனால் இன்டெல் உள்ளிட்ட நிறுவனங்களின் தொழில் பாதித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து ஐரோப்பாவின் போட்டி ஒழுங்குமுறை ஆணையம் விசாரணை மேற்கொண்டது. இதில் குவால்காம் நிறுவனத்துக்கு 78 ஆயிரம் கோடியே 23 லட்ச ரூபாய் அபராதம் விதித்தது. இந்நிலையில், பிரிட்டனைச் சேர்ந்த ஐசெரா என்ற மொபைல் மென்பொருள் உற்பத்தி நிறுவனம் 2009-2011-ல் குவால்காம் நிறுவனம், தங்கள் நிறுவனத்தைக் குறிவைத்து போட்டிக்காக விலையில் மாற்றத்தைக் கொண்டு வந்ததாக குற்றம்சாட்டியது.

இப்படி தொடர்ந்து குவால்காம் நிறுவனம் மீது புகார் வந்ததால் மீண்டும் விசாரணை நடத்திய போட்டி ஒழுங்குமுறை ஆணையம் இரண்டாவது முறையாக குவால்காம் நிறுவனத்துக்கு ஆயிரத்து 869 கோடியே 67 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.


Category: உலகம், புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE